*
பேய்களின் கூச்சலை
காய்ந்த
பனையோலைத் தட்டியில்
முடைந்தபடி
நீளும் இரவு..
சாமத்தின் மத்தியில்
கனவிலிருந்து
அலறி எழும்
குழந்தையின் கண்களில்
திரளும்
ஒரு
பயத் திரவம்..
மாடத்திலிருந்து
திருநீரு அள்ளி..
சிறு நெற்றியில்
நீர் குழைத்து
பூசுவாள் அம்மா..
சாம்பல் நிற
பேய்களின்
ஈரம்.. காய.. காய..
கடவுள் வெளுப்பான்
மெல்ல.. மெல்ல..
மீள் தூக்கத்தில்..
இரண்டும் உதிர..
பாயெங்கும்.. பரவும்..
பேயும் கடவுளும்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக