வெள்ளி, மே 22, 2009

பூனையின் பச்சைநிற கண்கள்..

*

நெடுஞ்சாலை
இருட்டில்..

தரை நசுங்கி
நைந்த..

ஒரு
பூனையின்
கண்கள்..

வேகமாய்
கடந்து சென்ற லாரியின்..
முன் விளக்கு
வெளிச்சத்தை..

உள்வாங்கி
ஒளிர்கிறது
வெளிர் பச்சையாய்..

பனி படரும்
இரவு நெடுக..

****

1 கருத்து: