வியாழன், மே 14, 2009

அரூப எறும்புகள்..!

*

நான்
எழுத முயலாத..
ஏதோ
ஒரு கவிதையின்
வார்த்தைகளை..

பிரிந்தலையும்
எழுத்துக்கள்..

என்
அறையெங்கும்..
ஊர்கின்றன..
அரூப
எறும்பாக..!

காலொடிந்த ஒன்று..
என்
பெருவிரலின்
நகக் கண்ணை..
நக்கி நக்கி..

பிடுங்கியெறிய..
துடிக்கிறது..
என்னை
நான்
வாசிக்கும் புத்தகத்திலிருந்து..

பொறுமையிழந்து..
மொன்னை
பல்லால்..
கடித்தும் தின்கிறது..
கொஞ்சங் கொஞ்சமாக..

அது..
தின்று
செரித்தது போக..

மிச்சமிருக்கிறோம்..

நானும்
கை விரல்களும்..
கொஞ்சம் காகிதமும்..
ஒரு
பேனாவும்..

செய்வதறியாது..!

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக