செவ்வாய், மே 19, 2009

பால் வீதி

*

இரவு முழுக்க
ஊறித் திளைத்த
உவமைத் துளிகளை

நக்கி ருசிக்க..
கால் பாவி
மெல்ல
அருகே வருகிறது..
கவிதைப் பூனை..!

வால் சுழற்றி
கிறங்கிய இன்பத்தில்
மீசை பறக்க..
காது விடைத்து...

வெறிக்கும்
செங்குத்து
விழிக் கோட்டுக்குள்..

அசைந்தபடி
மிதக்கிறது
மற்றுமோர்
பால் வீதி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக