*
ஆழக் கிணற்றின்
வட்டக் கரையூடே..
காரைச் சிப்பிகள்
சொருகிய
பள்ளச் செதில்களின்..
கரும்பச்சை
பாசித் துணுக்கு தோறும்..
ஊறிக் கிடக்கும்
உவமைத் துளிகள்..!
மனசால்
வழித்தெடுத்து..
மௌன இதழ்களில்
பூசத் துடிக்கும்
கவிதைகளை..
காற்றைப் போல
உச்சரிக்கிறாய்
காதுகளற்ற
சூனிய வெளியில்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக