செவ்வாய், மே 19, 2009

கரும்பச்சை உவமைத் துளி..

*

ஆழக் கிணற்றின்
வட்டக் கரையூடே..

காரைச் சிப்பிகள்
சொருகிய
பள்ளச் செதில்களின்..

கரும்பச்சை
பாசித் துணுக்கு தோறும்..
ஊறிக் கிடக்கும்
உவமைத் துளிகள்..!

மனசால்
வழித்தெடுத்து..

மௌன இதழ்களில்
பூசத் துடிக்கும்
கவிதைகளை..

காற்றைப் போல
உச்சரிக்கிறாய்
காதுகளற்ற
சூனிய வெளியில்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக