*
முத்தமிடுகிறோம்
மரணத்தை..
அது..
நாங்கள்
பெற்றெடுத்த குழந்தை..!
நீ
பவனி வரும்
எமனல்ல..
சுமந்து செல்லும்
எருமை..
லாடம் அடித்து
நடக்கும்
உன் குளம்புகள்..தேயும்போது..
இரு கூராய்..
வெட்டுப் படுவாய்
அது வரை
சகதி..
உனக்கு
சுகமாய் தான்
இருக்கும்..
ஒரு
பெரு மழைக்காக
காத்திருக்கிறோம்..
கந்தக வாசனை..
நுகர்ந்தபடி..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக