*
மனசின் ..
நெடிய
பாலைவனத்தின்
முடிவில்
தொடங்கி விடுகிறது..
அடர் காடு..
உள்ளே..
கை விரித்து
அழைக்கிறது..
கடும் இருட்டு..
எரியும்
நினைவின் ஒளியில்
துணை வரக்கூடும்
நிழல் போல்
உன் புன்னகை..
நின்று
உதறும்
பாதங்களில்...
மெல்ல உதிர்கிறது..
பாலைவன மணல் துகள்
சில..
****
அருமை இளங்கோ
பதிலளிநீக்கு