செவ்வாய், மே 19, 2009

ஸ்பரிச நாணல்

*

என்
மனக்கரையில்
குழிப் பறிக்கின்றன
உன்
புன்னகை நண்டுகள்..

கனவலை நுரைக்கும்
நீர்க் குமிழ்
ஒன்றில்..

வர்ணமாய்
தெறிக்கின்றன
உன் பெயரின்
ஒவ்வொரு எழுத்தும்..

என்
ஸ்பரிச நாணலின்
செம்பழுப்பு நிறமொத்த
வெம்மையை..

பார்வையால் தீண்டிய
உன்
சில்லிப்பில்..

உறைந்தது
காதலின்
கணம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக