*
என்
அறை கட்டிலில்
வீழ்ந்து கிடக்கிறேன்..
ஜன்னல் திட்டில்
வந்தமர்ந்த
குருவி
இட்டு வைத்த
இரண்டொரு
நெல்மணிகளை
கொத்திக் கொண்டு..
கழுத்தொடித்து
என்னை பார்த்த..
வட்ட விழிக்குள்..
கண்ணீராய்..
நான்
கரைந்தாலென்ன..?
ஏன்
தயங்குகிறாய்
என் குருவியே..!
உன்
குஞ்சுகளுக்கு
கூடு கட்ட..
நீ தேடும்..
வைக்கோல் துணுக்காய்..
காத்திருக்கிறேன்..
போய் வா...
*****
superb..
பதிலளிநீக்கு