*
வருவதாக
சொல்லி கிளம்பினான்..
நினைவின்
தொலைவிலிருந்து..
வந்து
சேரும்வரை..
காத்திருப்பின்
கதவுகள் தோறும்..
முளைக்கின்றன...
பல நூறு
சாவித் துளைகள்..
மனசின்
அலமாரி முழுக்கத்
தேடி களைத்தும்..
அகப்படவில்லை..
ஒரு சாவி கூட..
வந்தும் விட்டான்..
சொன்னதை விட
விரைவாக..
கை குலுக்கி..
புன்னகைத்தபோது..
கண்டு கொள்ள முடிந்தது
கை நிறைய
அவன்
வைத்திருந்த சாவிகளை..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக