வெள்ளி, மே 22, 2009

ஞாபக அலகுகள்..

*

நட்புக்காக ஏங்கி
மனம்
விரிக்கும் கிளைகளில்..

சிறகு கோதுகின்றன
ஞாபக அலகுகள்..

இலைகளூடே
தென்படும்
வான் துணுக்கில்..

மேகமொன்று
கடந்து போகிறது..

நேற்றிரவு அழுத
என்
கண்ணீர் துளிகளை..

கனமாய் சுமந்தபடி..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக