செவ்வாய், மே 19, 2009

கடல் குதிரைகள்

*

துடுப்பசைத்து
கடல் கிழித்தோடும்
கட்டுமரத்தின்
ஒட்டு நுனியில்..

ஊன்றி நிற்கின்றன
இரவின் கால்கள்..!

அலைகரங்களின்
நுரை நகங்களில்..
கொக்குகள்
போட்டுச் சென்ற
வெண்மை கோடுகளை

நக்கிப் பார்க்கின்றன
சிறு மீன்கள்..!

வெயில்
உருகியோடும்
நீர்வெளியில்..

கடல் குதிரையொன்றின்
மீதேறி..
பயணிக்கிறது..
மீளாத கவிதை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக