வெள்ளி, மே 22, 2009

யுகத்தின் பாடலொன்று..

*

மனிதம் மீட்ட
முடுக்கப்படும்
தந்திக் கம்பிகள்..

அறுபட்டு
தொங்குகின்றன
இசையைத் தொலைத்து..

யுகத்தின்
பாடலொன்று..

இரவின் நாவில்
முனகி..

ஒரு
எச்சிலைப் போல்
ஊறுகிறது..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக