*
இலை நரம்பின்
தண்டு கிளையோடு..
முயங்கி நகர்ந்த
வெயில் துணுக்கை..
சிலந்தியின்
எச்சில்..
வலை வீசி
பிடித்திழுத்து..
காற்று
கிள்ளி அடித்த..
மழை மிச்ச
துளியொன்று..
ஊர்ந்தகன்ற
எறும்பின்
தலை மோதி..
தெறித்த பொழுதில்..
மொக்குடைந்த
பூக்களின்
நறுமணம்..
காடு நிரம்பியது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக