செவ்வாய், மே 19, 2009

மொக்குடைந்த பூக்களின் நறுமணம்..

*

இலை நரம்பின்
தண்டு கிளையோடு..
முயங்கி நகர்ந்த
வெயில் துணுக்கை..

சிலந்தியின்
எச்சில்..
வலை வீசி
பிடித்திழுத்து..

காற்று
கிள்ளி அடித்த..
மழை மிச்ச
துளியொன்று..

ஊர்ந்தகன்ற
எறும்பின்
தலை மோதி..
தெறித்த பொழுதில்..

மொக்குடைந்த
பூக்களின்
நறுமணம்..

காடு நிரம்பியது..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக