வெள்ளி, மே 22, 2009

'அக்கக்கா...' குருவிகளின் குரல்..

*

ஊர்
ரயில்வே ஸ்டேஷனை விட்டு..
நகரும் நொடியில்..

நெஞ்சடைத்து விம்மி..
கண் பூக்கும்
நீரில் அலுங்கி..

நெளியும்
பிம்பமென
உறவுகள்..

பின்னகரும்
ஊரோடு..

தொடர்ந்து வரும்..
மின் கம்பிகளின்
மீதிருந்து..

'அக்கக்கா.. குருவியின் '
குரலில்..

பால்யம் தொட்டே..
கசிகிறது..

அசைந்தபடி..
நகரும்..
ரயில் இரவு..!

****

1 கருத்து: