*
ஊர்
ரயில்வே ஸ்டேஷனை விட்டு..
நகரும் நொடியில்..
நெஞ்சடைத்து விம்மி..
கண் பூக்கும்
நீரில் அலுங்கி..
நெளியும்
பிம்பமென
உறவுகள்..
பின்னகரும்
ஊரோடு..
தொடர்ந்து வரும்..
மின் கம்பிகளின்
மீதிருந்து..
'அக்கக்கா.. குருவியின் '
குரலில்..
பால்யம் தொட்டே..
கசிகிறது..
அசைந்தபடி..
நகரும்..
ரயில் இரவு..!
****
அருமை.. கனமான வரிகள்..
பதிலளிநீக்கு