செவ்வாய், மே 19, 2009

அறுபடும் காற்றலைகள்..

*

அறைக் கூரை..
மின்விசிறி இழையோரம்..
அறுபடும்.. காற்றலைகள்..

கிழிபடும்
என்
இரவின்
துணுக்குகளை..

அலைக்கழிக்கும்..
என்
அறையெங்கும்..

மனம் பொறுக்கும்..
ஆசைகளை..

இமை கவிழ்த்து..
மூடிக் கொள்ளும்..
மௌனம்..!

****

1 கருத்து: