திங்கள், ஆகஸ்ட் 30, 2010

மெட்ரோ கவிதைகள் - 78

*
பரஸ்பரம் கை குலுக்கி
புன்னகை வியர்க்கும் சங்கடங்களை

நுழைவாயில் மிதியடியில்
அழுந்தத் தேய்த்து
விடைபெறும்
சாமர்த்தியத்தை

சில
அவமானங்களுக்கு பிறகு
கற்றுத் தந்து விடுகிறது
நகரத்து
யதார்த்தங்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக