*
எங்கிருந்தெல்லாமோ
வந்து கொண்டிருக்கிறார்கள் தூதுவர்கள்..
என்
வறண்ட பகல்களின்
கதவுகளைத் திறந்தபடி..
இறுக்கிக் குலுக்கும் கரங்கள் வழியே
அழுந்தச் செய்கிறார்கள் துயரங்களை..
பின்
ஆறுதல்களைப் பரிசளித்துவிட்டு
வர்ணக் காகிதங்களென
வயதை வெட்டித் தருகிறார்கள்..
இனி
புதுப்பொலிவோடு இருக்கும்படி
பரிந்துரைக்கும் தூதுவர்கள்
என்
இரவின் புறவழிக் கதவைத் துளைத்து
வெளியேறுகிறார்கள்..
பிறகு
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக அணைகின்றன..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக