*
சுழன்று திரும்பிய
படிக்கட் வளைவில்
என்னை மடக்கினான்..
அங்கே கொஞ்சம் இருள் இருந்தது
ரகசியமாய்
ஆனால்
அவசரமாய்
அவன் தந்து விலகிய
முத்தத்தின் நிழல்..
என்
அகால இரவில்
இரண்டுத் துண்டுகளாய்
அறைக் கூரைக்குள் மிதக்கின்றன
விடியும் வரை
நடந்த அல்லாடலுக்குப் பின்..
அவை..
ஜன்னல் வழியே நுழைந்த
குருவிகளின்
சிறகைத் தொற்றி வெளியேறுகின்றன..
கீச்..கீச்..! - என்று
கத்தியபடி..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக