*
உன் வருகைக்காகக் பகலில் காத்திருந்த
நொடிதோறும்
சிறு தூறலில் நனைந்திருந்தது இலைகள்..
மேகம் மூடிய வானின் செதில்களில்
பறவைகளின் சிறகுகள் சுமந்து சென்ற
செய்தியொன்றை
நட்சத்திரம் பெற்றுக் கொண்டதை..
இரவில் உணர நேர்ந்தது..
உன்னைத் துணிப் பொதியில்
தாதியொருத்திக் கொண்டு வந்த போது..
நானுன் பால் வாசனை முகர்ந்த நிமிடம்..
நீயுன் இறுக மூடிய கண் கீற்றைப் பிரித்து
என்னைப் பார்த்த கணம்..
என்ன யோசித்தாய்..?
உன்
குட்டிக் கை விரல்களுக்குள் சேமித்து வைத்திருக்கும்
நம் ரகசியத்தை
எப்போது என்னோடு பகிரப் போகிறாய்..?
*****
( 25.8.2010 இரவு பிறந்திருக்கும் என் மகளுக்காக.. )
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக