திங்கள், ஆகஸ்ட் 30, 2010

உதிரிப் பூக்களின் மாலை நேரங்கள்..

*
மனனம் செய்ய முயலும்போதே..
மறக்கவும் முடிகிறது
வேகமாய் முணுமுணுக்கும்
உன் கோபத்தை..

அவைகளை
நினைவில் வைத்துக் கொள்வதற்கான
அவசியங்களை
ஒருபோதும்
நீ எனக்கு தந்ததில்லை..

சூடான தேனீர் பருகியதும்
குளிர்ந்த நீரில் கழுவிக் கவிழ்த்தும்
பித்தளைக் குவளைப் போல் தான்
அதை
நீ கையாள்கிறாய்..

விரும்பி நீ சொல்லி
நிறைவேறாத
உன் ஆசைகளை..

பெரும்பாலும் மாலை நேரங்களில்..

உதிரி மல்லிகைப் பூக்களோடு
தரையிலமர்ந்து..
நாரில் கோர்த்து முடிக்கிறாய் வேகமாய்...

ஆனால்..
கனத்த மௌனத்தோடு..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 2010 ]


http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3328

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக