*
வெளியிட முடியாத
ஒரு கோரிக்கையின் மௌனத்தில்
அசைந்தபடி இருக்கும் சொற்கள்
சந்தர்ப்ப நிழல்களின் இருளையும்
நிராகரிக்கின்றன..
ஒரு
எளிமையான மௌனம்
சிக்கலான சூழலில்..
படிப்பறிவில்லாத மனிதனொருவனின்
முக்கியமான விரல் ரேகை போல்
அழுத்தமாக பதிந்துவிடுகிறது..
பரஸ்பரம் பெற்றுக்கொள்ளும்
வாக்குறுதிகள் மீது
பூசப்படும் வெயில்..
மஞ்சள் நிற பளபளப்பெனவோ
திரவ பிசுபிசுப்பெனவோ
வழிந்தோடும் புதிர்ப் பாதையில்..
ஒரு
கூழாங்கல்லைப் போல
உடன் பயணிக்கிறது..
சொல்லப்படாத சொற்களின் மௌனமும்..!
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் - 2010 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக