*
'என்னைக் கொஞ்சம்
அமைதியாக இருக்க விடுங்கள் ' - என்பதில்
தொடங்குகிறது..
எனதிந்தத் தனிமை
அறை சுவற்றில் அசையும் ஜன்னல்வழி இலை நிழல்கள்
எப்போதும் முணுமுணுக்கும் பிரார்த்தனையைக்
கூர்ந்து கவனிக்க முடிகிறது
அந்நிழலைக் கடக்கும் பசித்த பல்லியொன்றின் வால் துடிப்பில்..
சுவற்றில் குறியிடும் சங்கேத மொழியை
வாசிக்க முடிகிறது
ஜன்னல் கம்பியில் வந்தமரும் நொடியில் நிகழும்
ஈயின் இறுதித் தருணத்தின் சிறகடிப்பில்..
காற்றில் எழுந்தடங்கும் மரணத்தின் இசையைக்
கேட்க முடிகிறது
இப்போது
இலை நிழல்கள் முணுமுணுக்கும் பிரார்த்தனைகளின்
அர்த்தங்கள் ஒவ்வொன்றாய் அவிழ்கிறது..
' என்னைக் கொஞ்சம் தனிமையில் இருக்க விடுங்கள்..'
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3243
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக