*
இவளை
இவள் உடல் பாகத்தின்
எந்தப் பகுதியிலிருந்து தொடங்கினால்..
ருசித்துப் பார்க்க கசப்பாய் இருப்பாள்..
தவிர்க்க விரும்பும் உவர்ப்பையோ
ஏற்க முடியா கசப்பையோ
ரத்த வாசனையோடு..
உணர வேண்டிய விரல்நுனி வாசிப்புக்கான
ரகசியங்களை..
எப்போது எழுதியிருப்பாள்..
அல்லது..
எங்கே தேக்கி வைத்திருப்பாள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக