*
கடக்க முடியா சுவரென
பெருங் கனவொன்று
குறுக்கே நின்றது..
அதை
இடித்துத் தகர்க்க
உன்னிடம்
ஒரு கடப்பாரைக் கேட்டேன்
நீ
இதுவரை
பார்த்து பார்த்து
வார்த்து வைத்திருந்த
உன் சேமிப்புக் கிடங்கிலிருந்து..
ஒரு
வசவு வார்த்தையை
உருவித் தந்தாய்...
எல்லாம் உடைந்தது..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக