*
இந்த உலகின்
இந்த நகரின்
இந்த வாழ்வின்
யாதொரு பயங்கரங்களோ
கட்டவிழும் துயரங்களோ
எல்லாவற்றையும்
கொஞ்சம் ஏற்றுக் கொள்கிறாய்
கொஞ்சம் நிராகரித்துவிடுகிறாய்
உன் மெல்லிய
தொடர் மூச்சு சப்தத்தில்
இசைவோடு சுழல்வது
இந்த
அறையின்
மின்விசிறி மட்டுமே..!
தூங்கு..
தூங்கும்போது தானே..
உனக்கான
வரைப்படத்தை நீ வரைவதாக
இந்த
விஞ்ஞானம் சொல்லுகிறது..
எனவே தூங்கு..
கை நிறைய கவிதைகளோடு
நான் காத்திருக்கிறேன்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக