*
என் மூர்க்கத்தின் விரிசலொன்று
தண்ணீர் நிரம்பிய
பிளாஸ்டிக் குவளையின் மூடியில்
கோடிழுத்துக் கிடக்கிறது..
கழுத்தின் வளைவுக்குப் பிறகு
நெளிந்திறங்கும்
நீர்த்துளி உருளைகளில்..
சற்று முன்வரை நீடித்த
இவ்வறையின் வெம்மை திரள்கிறது..
வெகு நிதானமாய் தரையில் பரவும்
என் நிழல்களின் பாசாங்கை
நூல் திரித்து சுண்டுகிறது
மனச் சாதுர்யம்..
நீ
மேஜை மீது
கைகள் மடித்து புதைத்துக் கொண்ட
முகத்தை மறைத்து
படரும் கூந்தலசைவை
மௌனமொன்று உடைக்கிறது
அகாலத்தின்
நொடி முள் கொண்டு..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக