திங்கள், ஆகஸ்ட் 30, 2010

மீளாத் துயரங்களைக் கவர்ந்து போகும்...பிணந்தின்னிக் கழுகுகள்..

*
தனிமை மணலில்
என்னை செருகிச் செல்கிறாய்
கைவிடப்பட்ட ஒரு போர்வாளைப் போல்..

என் மீது
மிச்சமிருக்கும் ரத்தக்கறைக்கு
பொறுப்பேற்கும் மனிதனை எப்போது
என்னிடம் அனுப்புவாய்..?

இறந்தவர்களின் நிழல்...
என் கைப்பிடியைக் கடந்துபோகும் பொழுதுகள்..
சுட்டெரிக்கிறது..
இந்த மணல் வெளியை...

உயிர்த் தாகம் தீர்ந்துபோகும்
ஒற்றை நீர்மைப் பூவை
பூத்துவிடும் எத்தனிப்பில் சூழ்வதில்லை உன் கருமேகங்கள்..

மரணத்தின் நரம்புத் தண்டில்
ஊர்ந்து வழியும் மீளாத் துயரங்களின் முனகல்களைக்
கவர்ந்து போகும் பிணந்தின்னிக் கழுகுகளின் நிழல் சிறகுகள்..
உன்னிடமிருந்து என் மீது இறங்குகின்றன...

இந்தக் கைவிடப்பட்ட போர்வாளைச் சுழற்றி வீசும்
சூழல் நுன்னியத்தின்
மற்றுமொரு களம்...கொண்டுவந்து சேர்க்கும் மனிதனை..
என்னை நோக்கி..
எப்போது அனுப்புவாய்..?

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3264

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக