*
என்னை விட்டு வெளியேறிடும்
நிலவை
தொலைத்தூர இருளில்
கண்சிமிட்டி அழைத்துக் கொண்டது
ஒரு
நட்சத்திரம்..
பார்த்தவுடன்
பற்றி எரியும் நெருப்புக் குழம்பில்
விழுந்து..குளிர்ந்து..
இன்னுமொரு கோளாகி..
எனக்குள் நுழைந்துவிட..
காத்துக் கிடக்கிறது...
பல யுகங்களாய்..
கிடக்கட்டும்..!
****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் -19- 2010 )
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10481&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக