திங்கள், ஆகஸ்ட் 30, 2010

இன்னுமொரு கோள்..

*
என்னை விட்டு வெளியேறிடும்
நிலவை
தொலைத்தூர இருளில்
கண்சிமிட்டி அழைத்துக் கொண்டது
ஒரு
நட்சத்திரம்..

பார்த்தவுடன்
பற்றி எரியும் நெருப்புக் குழம்பில்
விழுந்து..குளிர்ந்து..
இன்னுமொரு கோளாகி..
எனக்குள் நுழைந்துவிட..

காத்துக் கிடக்கிறது...
பல யுகங்களாய்..

கிடக்கட்டும்..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஆகஸ்ட் -19- 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=10481&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக