செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

நகர மறுக்கும் துயரங்களின் பாரம்..

*
சிதிலமுற்ற தேரென
நகர மறுக்கும்
துயரங்களின் பாரம்..

நினைவுச் சக்கரங்களின்
கனங்கொண்டு
மனதில் அழுந்த புதைந்து

உருண்டு வந்த
காலங்களின் சந்தர்ப்பங்களோடு
வெட்பத் தீ வீசும் செதில்களில் மட்குகிறது..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக