*
சொல்லிப் பிரியும் சொல்லில்
திரித்துக் கட்டப்படுகிறது
நைந்த பிரியத்தின் இழைகள்
தனித்த சாலையின்
நினைவுச் சில்லிடல்
இரவின் குளிரை அனுப்பிவைக்கிறது
வாசல் வரை
அகாலத்தின் மௌனத்தில்
மனம் முணுமுணுக்கும்
மொழியில்
பார்வையாளர் இல்லாத மேடையின்
திரைச்சீலையாக
மடிந்து மடிந்து கீழிறங்குகிறது
சொல்லிப் பிரிந்த
சொல்லின் பிரியம்
*****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 7 - 2010 )
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11275&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக