வெள்ளி, நவம்பர் 26, 2010

வெயில் ஒழுகும் ஓசை..

*
கிளைகளில் பூசிய
வெயில் ஒழுகும்
மதிய இடைவெளியில்

பூட்டிய பிறகான
யாருமற்ற பூங்காவில்

ஓசையற்று
உதிர்கிறது
பழுப்பு நிற இலைகள்

காய்ந்த சருகுகளூடே
ஓடித் திரியும் அணில்கள்
ஒரு கணம் நின்று
பின்
மரத்திலேறுகின்றன..

****

2 கருத்துகள்:

  1. காய்ந்த சருகுகளூடே
    ஓடித் திரியும் அணில்கள்
    ஒரு கணம் நின்று
    பின்
    மரத்திலேறுகின்றன..//

    கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!

    இராஜராஜேஸ்வரி.. :)

    பதிலளிநீக்கு