*
வார்த்தைகளின் பிரதேசத்தில்
கால் ஓய நடந்த பின்னும்
சிக்கவில்லை
ஓர் எழுத்தும்
எதிர்ப்பட்ட
வாக்கியக் குட்டையின்
கையகல நீர்மைக்குள்
நெடுநாளாய் எவர் வரவுமற்று
குழப்பத்துடன்
நீந்திக் கொண்டிருக்கிறது
ஒரு
மௌன மீன் குஞ்சு..!
****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 28 - 2010 )
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31011283&format=html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக