*
மனம்
மெல்ல நகர்கிறது
அவமானத்தின் முள் துடித்து
ஒரு எளிய நம்பிக்கை
நிறமிழக்கும் பொழுதில்
எல்லா இரவுகளும்
தம் புறவாசலில்
சிறுநீர் ஓடையை அனுமதிக்கின்றன
கொஞ்சமேனும் பற்றிக் கொள்ளும்
யாதொரு பிடிப்பிலும்
கல்லெறியும் சாதுர்ய புன்னகை
நறுவிசாய் உடைத்துப் போகிறது
ஒட்டுமொத்த சொற்களையும்
தன் முறைக்கென நிற்கும்
நீண்ட வரிசையில்
கை நழுவிப் போகிறது
இதுவரை
சொல்லப்பட்டிருந்த
எல்லாக் கட்டுமானங்களும்
*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ நவம்பர் - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3604
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக