ஞாயிறு, நவம்பர் 28, 2010

அனைத்தையும்..

*
காற்றில் குரல் கிழிக்கிறாள்
விரலால் யுகம் எழுதுகிறாள்

அளக்காமல் வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
குலுங்குகிறது நிலம்

கொலுசொலியில்
அதிர்கிறது காண்டீபம்

மழலைச் சிரிப்பில்
அனைத்தையும் கலைத்துவிடுகிறாள்
அது ஒரு நொடி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக