திங்கள், நவம்பர் 22, 2010

தவறவிட்ட தருணங்களின் மறு வருகை..

*
உன் தனிப்பார்வைக்கு
அனுப்பப்படும்
துயரங்கள் மொத்தமும்
என்னுடையவை அல்ல

நீ கேட்டுப் பழகிய சாயலை
அவை ஒத்திருக்கின்றன

அது
தற்செயல் அல்ல

கனவு கலைந்து எழும்
ஒரு தனிமை இரவின்
நிழலைப் போல்
உன் இருப்போடு இணைந்தவை

நீ தவறவிட்ட
தருணங்களின் மறு வருகை

உன் சூழ்ச்சிகளின் ரகசியங்களை
ஒரு
வாக்குமூலம் போல
உன்னிடம் ஒப்பித்துக் காட்ட
உனக்காக
அவை காத்திருக்கின்றன

மொத்தத்தையும்
ஒரே மூச்சில்
ஒரே இரவில் படித்துவிட வேண்டும்
என்றெந்த நிபந்தனையும்
இல்லை

பிரியப்பட்டால்
அவைகளை நீ பிரிக்காமல்
உன்
மேஜையின்
ஓர் ஓரத்தில் அப்படியே
விட்டும் விடலாம்

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, வார்த்தைகள், உணர்வுகள் அனைத்தும் மிக அருமை. பல முறை விரும்பி திரும்ப வாசித்தேன்.

    பதிலளிநீக்கு