*
வினோத மலரொன்றின்
இதழ் நுனிப் பற்றி ஊசலாடுகிறான்
மணற் புயல் போல்
பூவினுள்ளிருந்து பலமாய் வீசுகிறது
மகரந்தத் துகள்
மஞ்சள் அடர்ந்து
முகத்தில் படர
மூர்ச்சையாகி மண்ணில் குழைகிறான்
இன்னொரு வசந்தத்தில்
செடியின்
மற்றுமோர் தளிர் கிளையில்
பெயரற்ற வினோத மலராய்ப் பூக்கிறான்
****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர் - 21 - 2010 )
http://www.thinnai.com/?module=displaystory&story_id=310112114&format=html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக