*
தனித்து எரியும்
ஒற்றை பல்பைச் சுற்றி
அடத்தோடு
மொய்த்துக் கொண்டிருக்கிறது
மழைத் தும்பி
இரவின் வழித் தப்பி
பணியின் ஈரத்தில் ஏமாந்து
சொற்ப வெப்பத் தீண்டலில்
தொடர்ந்து ரீங்கரித்து
கண்ணாடிச் சருகு இறகின் அழைப்போடு
எங்கிருந்தோ வால் துடிக்க
நாவை சுழற்றுகிறது பல்லியின் நிழல்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக