*
இருள் கிழிய
சிவந்த டிராகனின் முதுகுச் செதில்
நெளிகிறது
முதுகில்
பச்சைப் பாம்பு விழுங்க விம்மும்
கனியின் விஷம் துளிர்க்கும்
காம்பில்
முடிவுற்று நீளும்
முதல் பாவம்
காமத் தோட்டத்து
கறுத்தப் புதர்களில் சுருள்கிறது
முனையெது நுனியெது..
குழம்பும் களிப்பை
சக்கையாக்கி செரிக்கிறது
கண்கொத்தி இரவு..
*****
நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 19 - 2010 )
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11489&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக