வெள்ளி, நவம்பர் 26, 2010

நிழலை மட்டும் விட்டுப் போகிறாய்..

*
சின்னஞ்சிறு புள்ளியில்
புன்னகை ஒன்று
குவிந்து கிடந்தது

மெல்ல நடந்து
அருகே வருகிறாய்
குனிந்து
எடுத்துக் கொள்கிறாய்

உன்
நிழலை மட்டும்
விட்டுப் போகிறாய்

பசியோடு விழுங்கத்
தொடங்குகிறது
இரவு

தெரு விளக்குகள்
மினுக்கி மினுக்கி பூக்கின்றன
ஆரஞ்சு நிற வர்ணம் குழைந்து
பாதையெங்கும் கசிகிறது

இனி நீ வரப்போவதில்லை
என்றபடி
அவிழ்ந்து கீழிறங்குகிறது
ஒரு
கனத்த மழைத் துளி

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக