திங்கள், நவம்பர் 22, 2010

புன்னகை இழந்து..நாட்கள் அனலாடும் தருணம்..

*
ஒரு முறையாவது சொல்லிப் போ
தீயில் எரியும் என் கனவின் கதவில்
உன் இலக்கம் எத்தனை..

வானம் கிழிந்து
நிலவு வழிந்தத் தடத்தில் உன் காலடிச் சுவடு எது..

புன்னகை இழந்து..நாட்கள் அனலாடும் தருணம்
சிறகு உதிரப் பறத்தல்
வாய்ப்பதில்லை

எழுதுகிற குறிப்பின் நிழலில் மறைகிறது
கால் புள்ளி - அரைப் புள்ளி -
மற்றுமொரு முற்றுப்புள்ளி

நீயற்றுப் போகும் இடைவெளியில்
எல்லாம் எரிகிறது..

சொல்லிப் போ
உன் இலக்கம் எத்தனை..!

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 25 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11644&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக