*
கைவிடப் படும்
ஒரு தருணத்தின் ஓரப் பிசிறுகள்
கொஞ்சம் கூர்மையாகிறது
அது ஒரு
பூ வேலைப்பாடு அல்ல
பிடித்தமான கைக்குட்டையில்
வரைந்து வைத்துக் கொள்ள
வலி..
வானம் கிழிந்து மின்னல் அறுந்து
பூமி மீது பற்றி எரியும்
மரக் கிளையில்
ஊர்ந்து கடக்கும் நத்தையின் நிழல்
அந்தக் கூர்மை
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக