வெள்ளி, நவம்பர் 26, 2010

வானெங்கும் மலர்கள் உதிரத் தொடங்கிய கணம்..

*
ஒரு
கனவை வடிக்கட்டுவதற்கு
இந்த இரவின்
மறு நுனியை இழுத்துப் பிடிக்க
உன் ஒருத்தியை மட்டுமே
அழைத்திருந்தேன்

நீயுன்
பால்கனி தொட்டியில் பூப்பதற்கு
குளிர் மேவும் இருளில்
குவிந்து காத்துக் கிடக்கிறாய்

பிறகு..

என் வானெங்கும்
மலர்கள் உதிரத் தொடங்கிய
கணம் முதல்
இந்தத் தனிமைப்
படுக்கையறை முழுதும்

மெல்லப் பரவுகிறது
உன்
முத்த வாசம்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக