*
மற்றுமொரு காயத்தை
நேற்று கொண்டு வந்து சேர்ப்பித்தாய்
இன்றிரவின் உரையாடல் முழுக்க
அதன் துர்வாடை.
அதனால் என்ன..
பிரிவது என்ற தீர்மானங்களுக்கு முன்
இந்த மேஜையில்
எத்தனை மெழுகுவர்த்திகள் எரிந்தாலும்
கவலையற்றுப் போகிறோம்
இந்தக் குறைந்த வெளிச்சத்தில்
மடங்கி நீளும்
சொற்ப நிழலுக்குள்
முன்பொரு முறை பரிமாறிக்கொண்ட
முத்த வெப்பத்தின்
அண்மை..
உடலுக்குள் மட்டுமல்லாமல்
நினைவின்
பிரதேசமெங்கும்
கொடிச் சுற்றிப் பின்னுகிறது
வலியை அடையாளமிட்டு..
அதனால் என்ன..
மற்றுமொரு காயத்தை
நாளையும் கொண்டு வருவாய்..
****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( நவம்பர்- 1 - 2011 ) http://www.thinnai.com/?module=displaystory&story_id=310110117&format=html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக