சனி, அக்டோபர் 30, 2010

பிணைப்பில்லாக் கயிறு..

*
விடைபெறும்போது
ஒரேயொரு சத்தியத்தை
நீ என்
உள்ளங்கையில் அழுத்தியிருக்கலாம்

அது
இந்த விடுதி தனி அறை ஜன்னல்
ஊடே
மர நிழல் போல் சுவரெங்கும்
கிளைத்து
என்
கால் கட்டைவிரலைக் கவ்வியிருக்கும்

பிறகு
என் கனவின் மணல்வெளியில்
பிணைப்பில்லாக் கயிற்றில்
தலைகீழாய்த் தொங்கியிருப்பேன்

வயிறு புடைத்து இன்புறும்
ஒரு
வௌவாலென..

****

1 கருத்து: