சனி, அக்டோபர் 30, 2010

பசித்த வாடை..

*
எனது
விருப்பங்களின்
தசைநாரைப் பிளந்து

மௌனக் கொக்கியில்
தொங்கவிட்ட பின்

எழுந்து
பறக்கின்றன
பசித்த வாடையோடு

ஆயிரம் நினைவுகள்..!

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, "பசித்தவாடையோடு" என்ற வார்த்தைகள் தலைப்பாக வைக்கப் பட்டதிலிருந்து, (நிறைவேறாத)விருப்பங்கள், நினைவுகள் இரண்டும் வேறுவேறு, எதிர் எதிரானவையாகவும் இருக்கக் கூடும் என்றும், நிறைவேறாத விருப்பங்கள், நடந்த நினைவுகளுடன் வலியோடு முரண்பட்டு மௌனத்தின் கொக்கிகளில் மாட்டுகிறதோ மனதை. அருமை. மீண்டும் வலி.

    பதிலளிநீக்கு