வியாழன், அக்டோபர் 28, 2010

கூர்மையான வார்த்தையின் இரவு..

*
மௌனத்தை விட வலிமையான
ஒரு திரையை
நீயேன்
நமக்கிடையில்
இழுத்துக் கட்டுகிறாய்

அதைக் கிழித்தெறிய
கூர்மையான
வார்த்தையொன்றை
இரவெல்லாம் சானைப் பிடிக்கிறேன்

கண்ணீர்ப் பட்டு
துருவேறுகிறது
அதன் அர்த்தம்

****

4 கருத்துகள்:

  1. மிக மிக அருமை சகோ....

    // கவிதையை பாராட்ட
    வார்த்தையொன்றை
    நாளெல்லாம் சானைப் பிடிக்கிறேன் //

    --
    அன்புடன்
    கவிநா...

    பதிலளிநீக்கு
  2. கண்ணீர்ப் பட்டு
    துருவேறுகிறது
    அதன் அர்த்தம்


    ம்ம்ம்

    நன்று....

    கவிதைக்காரா....

    பதிலளிநீக்கு
  3. நன்றி..!
    கவிநா / சக்தி / ஜெயசீலன்

    பதிலளிநீக்கு