சனி, அக்டோபர் 30, 2010

கையில் குடை வைத்திருக்கிறாள்..

*
ஆயிரம் முறை கெஞ்சியாகிவிட்டது
இன்னும் விடவில்லை
இந்த மழை

கையில் குடை வைத்திருக்கிறாள்
ஆனாலும்
விரிக்காமல் ஏன் காத்திருக்கிறாள்

திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறாள்

அதிகமாய் குளிர்கிறது
இந்த மாலை நேரம்..

****

2 கருத்துகள்:

  1. "திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறாள்"

    -இவ்வரிகள் சொல்கிறது இளங்கோ, கெஞ்சியும் மழை நிற்காமல் இருப்பதற்கான காரணம், அவளும் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள் மழையே நிற்காதே என, குடையை விரிக்காமல் இருப்பதற்கு காரணம் இதை சாக்காக வைத்தாவது சற்று நேரம் நின்று உங்களை(?) பார்த்துக் கொண்டிருக்கலாமென்று தான்.இம்ம்ம்...காதல் மழை.

    பதிலளிநீக்கு