*
நீங்கள் ரகசியமாகப்
பதியனிடும் தாவரங்களின் இலைகளில்
மர்மங்களெனத் திரண்டு
உருள்கின்றன
உரசியபடி நுகரும்
மௌனப் பரிவர்த்தனைகள்
பச்சை நரம்புகளோடு பின்னுதல்
ஒரு கோட்பாடெனவும்
அதிலொரு பிரார்த்தனை நதி
ஊடுருவி திசையெங்கும் ஓடுதல்
ஒரு கட்டளை எனவும்
உரையாடல்களைக் கட்டமைக்கிறது
காலத்தின் பலி பீடம்
****
arumai ilangko.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோநா..!
பதிலளிநீக்கு:)