*
கடவுளின் சடை நுனியில்
சாத்தானின் முகம் வளர்கிறது
கூப்பும் கைகளுக்குள்
நடுங்கி உதிர்கிறது மந்திரம்
பிரார்த்திக்கும் உதடுகளுக்குள்
விஷம் சுழற்றுகிறது
சாத்தானின் நாக்கு
எளிய நம்பிக்கைகளின்
கர்ப்பகிரகத்துக்குள்
தீண்டப்படாத சர்ப்பம் போல்
சயனித்து கிடக்கிறது பொய்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக